போ4கை3ஶ்வர்யப்1ரஸக்1தா1னாம் த1யாப1ஹ்ருத1சே1த1ஸாம் |
வ்யவஸாயாத்1மிகா1 பு3த்3தி4: ஸமாதௌ4 ந விதீ4யதே1 ||44||
போக---—மனநிறைவு; ஐஶ்வர்ய—--ஆடம்பரம் ப்ரஸக்தானாம்----பற்றுதலால் சூழப்பட்டவர்களின்; தயா---அவற்றால்; அபஹ்ருத-சேதஸாம்—--குழம்பிய புத்தியுடையவர்களுக்கு; வ்யவஸாய-ஆத்மிகா—--உறுதியான; புத்திஹி—--புத்தி; ஸமாதௌ----நிறைவு; ந—ஒருபோதும்; விதியதே—நிகழ்கிறது; (.ந விதீயதே—--ஏற்படுவதில்லை)
BG 2.44: உலக இன்பங்களில் ஆழமாகப் பற்றுக்கொண்ட அவர்களின் மனதாலும், இத்தகைய விஷயங்களால் குழம்பிப்போயிருக்கும் அவர்களுடைய புத்திகளாலும், கடவுளை நோக்கிய பாதையில் வெற்றி பெறுவதற்கான உறுதியான தீர்மானத்தை அவர்களால் கொண்டிருக்க முடியாது.
புலனின்பத்தில் மனதைக் கொண்டவர்கள் போக் (திருப்தி) மற்றும் ஐஷ்வர்யம் (ஆடம்பரம்) ஆகியவற்றில் அக்கறை கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் தங்கள் புத்திசாலித்தனத்தை ஈடுபடுத்துகிறார்கள் மற்றும் அவர்களின் இன்பத்தை அதிகரிப்பதற்கு எவ்வாறு பொருள் உடைமைகளை அதிகரிப்பது என்று சிந்திக்கிறார்கள். இவ்வாறு திகைத்து நிற்கும் அவர்களால் இறைவனை அடையும் பாதையில் பயணிப்பதற்குத் தேவையான உறுதியான தீர்மானத்தை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.
போ4கை3ஶ்வர்யப்1ரஸக்1தா1னாம் த1யாப1ஹ்ருத1சே1த1ஸாம் |
வ்யவஸாயாத்1மிகா1 பு3த்3தி4: ஸமாதௌ4 ந விதீ4யதே1 ||44||
உலக இன்பங்களில் ஆழமாகப் பற்றுக்கொண்ட அவர்களின் மனதாலும், இத்தகைய விஷயங்களால் குழம்பிப்போயிருக்கும் அவர்களுடைய புத்திகளாலும், கடவுளை நோக்கிய பாதையில் வெற்றி பெறுவதற்கான உறுதியான தீர்மானத்தை அவர்களால் கொண்டிருக்க …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!